சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் மீண்டும் பேச்சு : முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

22 Dec, 2022 | 08:24 AM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருந்த நிலையில் குறித்த பேச்சு இடம்பெற்றுள்ளது.

அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்‌ச, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, கடந்த சர்வகட்சி மாநாட்டில் பேசப்பட்ட தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் சம்பந்தமாக மீளவும் கவனம் செலுத்தப்பட்டது. 

குறிப்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரமாக முன்னெடுப்பதற்கு முன்னதாக அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி அபகரிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்வரும்  2 ஆம் திகதி பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெறும் போது அதில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அரசாங்கத் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி தமிழ் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பபேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடல் தொடர்பில் நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதற்கும் இதன்போது அரசாங்கத் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனவரி மாதம் 10, 11,12,13, ஆம் திகதிகளில் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சம்பந்தன், அரசியல் கைதிகள் ஐவரை மட்டும் விடுவித்தால் போதாது முழு அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். முழுமையான காணி விடுவிப்பும் அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43