குரங்குகளின் சேட்டையால் விரக்தியடைந்த நபர் ஒருவர் அங்கிருந்த குரங்கை பிடித்து தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்த விநோத சம்பவம் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் நீண்ட நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றிவந்த குரங்குகள் அங்கு வசிப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்துவந்துள்ளது.
குரங்குகளை விரட்ட வழிதெரியாமல் விரக்தியடைந்த குடியிருப்புவாசி ஒருவர், தனது வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த குரங்கை பிடித்து, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பிடிக்கப்பட்ட குரங்கும், அமைதியாக பின் இருக்கையில் அமர்ந்தவண்ணம் அவருடன் சென்றுள்ளது.
பின்னர் பொலிஸாரிடம் குரங்குகளின் அட்டகாசம் குறித்து எடுத்துக்கூறி, தான் பிடித்துவந்த குரங்கை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துச் சென்றுள்ளார். பிடிபட்ட குரங்கை பொலிஸார் காட்டுப்பகுதியில் விடுமாறு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அந்த ஸ்மார்ட் குரங்கு, வனத்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்கரைச் சேர்ந்த அந்த நபர் குரங்கை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM