உயிலங்குளம் பொலிஸ் பிரிவில் மாதோட்டம் புகையிரத நிலையத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரதத்துக்கு முன்னால் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து, உயிரிழந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (டிச. 19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் குடும்பப் பிரச்சினை காரணமாகவே புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் உயிரிழந்தவர் உயிலங்குளம் பகுதியின் மணற்குளம் தண்ணீர்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான நல்லத்தம்பி நகுலேஸ்வரன் (வயது 37) என்பவரே ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் தெரியவருவதாவது:
குறித்த புகையிரதம் தலைமன்னார் நோக்கி வந்துகொண்டிருந்தபோது குறித்த நபர் தலைக்கவசம் அணிந்தவாறு மதுபோதையில், ரயில் பாதையிலுள்ள கட்டையில் பியர் போத்தலுடன் உட்கார்ந்திருந்துள்ளார்.
அவ்வேளை புகையிரதம் வந்துகொண்டிருக்க, புகையிரத சாரதி புகையிரத பாதையில் நபரொருவர் அமர்ந்திருப்பதை கண்டு, புகையிரத ஒலியை ஒலிக்கச் செய்ததோடு, புகையிரதத்தின் வேகத்தையும் குறைத்துள்ளார்.
இந்நிலையில், புகையிரதம் அருகில் வந்ததும் அதன் முன்னால் பாய்ந்து, உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அதனையடுத்து, சடலம் அந்த புகையிரதத்தில் ஏற்றிச்செல்லப்பட்டு, மன்னார் புகையிரத நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அப்புகையிரதம் புறப்பட்டுள்ளது.
பின்னர் சடலமானது மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ. குமணகுமார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவரின் மனைவி வாக்குமூலம் அளிக்கையில்,
தங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், குடும்ப பிரச்சினையால் தானும் கணவரும் சுமார் எட்டு மாதங்களாக பிரிந்திருப்பதாகவும், கணவர் மது அருந்துவதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு, பொலிஸ் நிலையத்தில் பல முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே தாம் பிரிந்து வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தை விட்டுப் பிரிந்துவந்து, சில காலம் தன்னுடன் வசித்து வந்ததாக விசாரணையின்போது கூறிய உயிரிழந்தவரின் தாயார், தன் மகன் மனைவியுடன் சேர்ந்து வாழ முற்பட்டும், அவரது விருப்பம் கைகூடாத காரணத்தால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு உயிரிழந்தவரின் மனைவி கணவரை பிரிந்து வாழும் நிலையில், மகனின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி தாய் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சடலத்தை தாயாரிடம் ஒப்படைக்கும்படி, மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM