முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட யுஎஸ்எயிட்டின் அதிகாரி பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள மக்களை சந்தித்தார்

Published By: Rajeeban

20 Dec, 2022 | 01:09 PM
image

யுஎஸ்எயிட்டின் மனிதாபிமான விவகாரங்களிற்கான ஆலோசகர் அமெரிக்காவின் நிதி உதவியுடன் உணவுப்பாதுகாப்பின்மையால்  பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலக உணவுதிட்டம் முன்னெடுத்துள்ள திட்டங்களை பார்வையிட்டார்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம்  யுஎஸ்எயிட்டின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பணியகத்தின்  சிரேஸ்ட பிராந்திய திட்ட அதிகாரி டஸ்டின் சியாயு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவரை வரவேற்றது.

யுஎஸ்எயிட் அதிகாரி உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துள்ளதுடன் அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

உலக உணவு திட்டத்தின் ஆதரவு எப்படி தங்களிற்கு நாளாந்த உணவு கிடைப்பதற்கு உதவுகின்றது என அவர்கள் தெரிவித்ததையும்  அவர் செவிமடுத்தார்.

தனது இலங்கை விஜயத்தின் போது சியாவு இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உள்ள மக்களை சந்தித்தார்.அவர்களின்போசாக்கு தொடர்பான தேவைகளை அறிவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இவர்கள் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்,இவர்களில் குழந்தைகளிற்கு பாலூட்டும் தாய்மார்களும் கர்ப்பிணிகளும் உள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக உலக உணவு திட்டத்திற்குஅமெரிக்கா 20 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிற்கு நிதி உதவி மற்றும் உலர்உணவு போன்றவற்றை வழங்குவதற்காக யுஎஸ்எயிட் சமீபத்தில் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

தேசிய பாடசாலை உணவு திட்டத்திற்கு உதவுவதற்காக யுஎஸ்எயிட் உலக உணவு திட்டத்திற்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

இலங்கையில் உலக உணவு திட்டத்தின் செயற்பாடுகளிற்கான குறிப்பிடத்தக்க நிதியை யுஎஸ்எயிட்டே வழங்குகின்றது சர்வதேச அளவில் எங்களிற்கான அதிக உதவியை  யுஎஸ்எயிட்டே வழங்குகின்றது என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்தீக்கி  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க...

2025-05-21 17:27:07
news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17