யுஎஸ்எயிட்டின் மனிதாபிமான விவகாரங்களிற்கான ஆலோசகர் அமெரிக்காவின் நிதி உதவியுடன் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலக உணவுதிட்டம் முன்னெடுத்துள்ள திட்டங்களை பார்வையிட்டார்.
ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் யுஎஸ்எயிட்டின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பணியகத்தின் சிரேஸ்ட பிராந்திய திட்ட அதிகாரி டஸ்டின் சியாயு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவரை வரவேற்றது.
யுஎஸ்எயிட் அதிகாரி உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துள்ளதுடன் அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
உலக உணவு திட்டத்தின் ஆதரவு எப்படி தங்களிற்கு நாளாந்த உணவு கிடைப்பதற்கு உதவுகின்றது என அவர்கள் தெரிவித்ததையும் அவர் செவிமடுத்தார்.
தனது இலங்கை விஜயத்தின் போது சியாவு இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உள்ள மக்களை சந்தித்தார்.அவர்களின்போசாக்கு தொடர்பான தேவைகளை அறிவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இவர்கள் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்,இவர்களில் குழந்தைகளிற்கு பாலூட்டும் தாய்மார்களும் கர்ப்பிணிகளும் உள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக உலக உணவு திட்டத்திற்குஅமெரிக்கா 20 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிற்கு நிதி உதவி மற்றும் உலர்உணவு போன்றவற்றை வழங்குவதற்காக யுஎஸ்எயிட் சமீபத்தில் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
தேசிய பாடசாலை உணவு திட்டத்திற்கு உதவுவதற்காக யுஎஸ்எயிட் உலக உணவு திட்டத்திற்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
இலங்கையில் உலக உணவு திட்டத்தின் செயற்பாடுகளிற்கான குறிப்பிடத்தக்க நிதியை யுஎஸ்எயிட்டே வழங்குகின்றது சர்வதேச அளவில் எங்களிற்கான அதிக உதவியை யுஎஸ்எயிட்டே வழங்குகின்றது என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்தீக்கி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM