கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.
இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத்தில் வென்றுள்ளது.
கராச்சியில் நடைபெற்ற 3 ஆவது போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 304 ஓட்டங்களையும் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 354 ஓட்டங்களையும் பெற்றன.
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 216 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
இதனால் இங்கிலாந்துக்கு 176 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணியிக்கப்பட்டது.
போட்டியின் 4 ஆவது நாளான இன்று காலை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வென்றது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களில் பென் டக்கெட் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றார். ஸாக் க்ராவ்லி 41 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
3 ஆவது போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இங்கிலாந்து வீரர் ஹரி புரூக் தெரிவானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM