(க.கிஷாந்தன்)
மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவரை பொலிஸாருடன் இணைந்து அதிரடிப் படையினரும் 5 குழுக்களாக பிரிந்து தொடர்ந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு முதல் காணாமால் போன இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும், இவர்களை வழிகாட்ட சென்ற லக்ஷபான எமில்டன் தோட்ட தொழிலாளி மா. கிருஷ்ணசாமி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், இதில் 2 பெண்கள் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்றிரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரும் அதிரடைப் படையினரும் ஐந்து குழுக்களாக பிரிந்துச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM