தமிழினம் அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் - பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

Published By: Vishnu

18 Dec, 2022 | 04:40 PM
image

தமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால்  தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

 

இன்று (18-12-2022) கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலம் காலமாக தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் ஆக்கிரமிப்புக்களும் தெடர்கின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் தமிழர் தாயகத்தின் மீதான நில ஆக்கிரமிப்புக்கள் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்தல் தொல்லியல் அடையாளங்களை ஆக்கிரமித்தல் அதன் அடையாளங்களை மாற்றுதல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

அழிவின் விளிம்பிலிருந்து தமிழ் இனத்தைபாதுகாக்க வேண்டும் அப்படி என்றால் நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் குறிப்பாக நிர்வாக அலகுகள் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (18-12-2022) பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பாகி நடைபெற்றன.

இதில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் சசிகலா ரவிராஜ்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவனபவன் சாந்தி சிறீஸ்கந்தராஜா  இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாட்டாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18