சென்னையில் வர்தா புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காற்றால் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு பல மாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகள் சரிந்து விழுந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வர்தா புயல் காரணமாக பாதுகாப்பு கருதி 4 மாவட்டங்களில் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை புயல் காரணமாக மூவாயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளமையால் மின்சார சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
வர்தா புயல், சென்னைக்கு அருகே பழவேற்காடு - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க ஆரம்பமாகியுள்ளதால் 120 முதல் 140 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வர்தா புயல் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு இரவு 7 மணிவரை வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சூறாவளி காற்று வீசிவருவதால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சூறைகாற்றால் தூக்கி வீசப்பட்டன.
பலத்த காற்றால் ஆங்காங்கே வீதிகளில்; மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்தன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
இதனிடையே சென்னை டிஎல்எப் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் காற்றில் பறந்தன. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM