நாட்டில் 47900 டெங்கு நோயாளர்கள் : கட்டுப்படுத்த முப்படைகளும் களத்தில்

12 Dec, 2016 | 04:02 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இவ்வாண்டில் மாத்திரம் டெங்கு நோயால் 47900 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு டெங்கு நோயை கட்டுப்படுத்த முப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு , கம்பஹா , களுத்துறை , காலி , யாழ்ப்பாணம் , இரத்தினபுரி , குருநாகல் , புத்தளம் , மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதனை முற்றாக ஒழிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது. 

 டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டமொன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தேசிய வேலைத்திட்டம் குறித்து தீர்மானிக்கப்பட்டது.

முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினை தேவையான வகையில் பயன்படுத்தி நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டதை நடைமுறைப்படுத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டது. 

இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் கேட்டுக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58