ஜே.வி.பி. யை தவிர ஏனைய அரசியல் கட்சிகள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட அதிக கவனம் - சாகர காரியவசம்

Published By: Digital Desk 5

17 Dec, 2022 | 05:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூன்று அரசியல் கட்சிகள் கூட்டணியாக போட்டியிட பிரதான அரசியல் கட்சிகளுடன் தற்போது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியை தவிர ஏனைய அரசியல் கட்சிகள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட அதிக கவனம் செலுத்தியுள்ளன.

ஸ்ரீலங்கா பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் எதிர்காலத்திற்காக கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவதில் தவறேதும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஏற்பார்கள்,ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியை அமைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையிலான பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தற்போது ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,இலங்கை மேலவை கூட்டணி,மற்றும் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஒன்றிணைந்து கூட்டணியை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான இலங்கை மேலவை கூட்டணியினர் டலஸ் அழகபெரும தரப்பினருடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் கடந்த வாரம் இலங்கை கம்யூனிச கட்சி கட்சி காரியாலயத்தில் ஒன்று  கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் சிவில் தரப்பினர் மற்றும் புதிய அரசியல் தரப்புடன் கூட்டணி அமைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்...

2025-01-17 16:42:09
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11
news-image

2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின்...

2025-01-18 14:51:16
news-image

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித்...

2025-01-18 14:20:16
news-image

மாத்தளையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தீ...

2025-01-18 14:03:58
news-image

ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின்...

2025-01-18 13:48:33