வவுனியா, நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் ஒரு தொகை முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இதனால் ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று 1984 ஆம் ஆண்டு முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இக் காலப்பகுதியில் மக்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 32 ஆண்டுகளின் பின்னர் தற்போது அதிகப்படியான பழம் காய்த்துள்ளமையால் 1984 ஆண்டு ஏற்பட்ட வறட்சி போன்று தற்போதும் ஏற்பட்டு விடுமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதேவேளை குறிப்பிட்ட சிலர் பழங்களை பிடுங்கி ஒரு கிலோகிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள்.
மேலும் ஒரு சிலர் பழங்களை பிடுங்குவதற்காக மரம் அறுக்கும் கருவியை பயன்படுத்தி மரங்களை அறுத்து விழுத்துவதனால் அவ்விடத்தில் பொலிசாரும், வனவள பகுதியினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி ஒலுமடு, ஊஞ்சால்கட்டி, மருதோடை, காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதிகளிலும் முரளிப்பழம் பழுத்து குலுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM