(எம்.மனோசித்ரா)
வங்குரோத்தடைந்துள்ள நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கும் கலாசாரமே தற்போது காணப்படுகிறது.
மறைமுக வரி பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மாத்திரமின்றி , நேரடி வரியையும் அதிகரித்து மக்களிடமிருந்து அவர்களது ஒட்டுமொத்த வருமானமும் அரசாங்கத்தினால் சுரண்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பணவீக்கம் 80 சதவீதமாக அதிகரித்துள்ளதன் பின்னணியில் , வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்ய முடியாத நிலைமையிலேயே இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரி சலுகைகளைப் பெற்றுக் கொண்ட செல்வந்தர்கள் அதன் மூலம் மக்களுக்கு எவ்வாறு நிவாரணத்தை வழங்கினர் என்பது தொடர்பில் எந்த விடயமும் கூறப்படவில்லை.
பொருளாதாரக் கொலைக்கு பிரதான காரணமான முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக இதுவரையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் ஆகக் குறைந்தது 1000 - 2000 கட்டணத்தை செலுத்த வேண்டியவாறு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது.
மறுபுறம் மார்ச்சில் முழு நேர மின் துண்டிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. ஆனால் இதனை தவிர்ப்பதற்கு தம்மிடமுள்ள வேலைத்திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை.
சேதனப் பசளையின் மூலம் பசுமை விவசாயத்தை மேம்படுத்துவதாகக் கூறி விவசாயத்தை முற்றாக சீரழித்துள்ளதோடு , சீனாவிற்கு 9.6 மில்லியன் டொலரையும் செலுத்த வேண்டிய நிலைமையையே இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 80 ரூபாவாகக் காணப்பட்ட அரிசியின் விலை இன்று 200 ரூபாவை விட அதிகரித்துள்ளது.
தற்போது வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் , விவசாயிகளுக்கு தமது நெல்லை குறைந்த விலைக்கு கூட விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதே போன்று முட்டை, பால் போன்ற ஏனைய உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்தி அனைத்தையும் இறக்குமதி செய்வதே இந்த அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM