இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் ஒருவரை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளை திறந்த மனதுடன் முன்னெடுப்பதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சாப்டர் இனந்தெரியாத பகுதியொன்றிற்கு தனது வாகனத்தில் சென்றிருக்கலாம் பலரை அல்லது ஒருவரை சந்தித்திருக்கலாம் -இதன் பின்னர் கனத்த மயானத்தின் கார்தரி;ப்பிடத்திற்கு வியாழக்கிழமை மதியம் வந்திருக்கலாம் .
அவரது காரில் வைத்து அன்டெனா வயரினால் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருக்கலாம்.
தினேஸ் நேற்று நபர் ஒருவரை ( பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) சந்திப்பதற்காக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும் அந்த நபர் தன்னால் அந்த இடத்திற்கு வரமுடியாது என குறிப்பிட்டுள்ளார், தினேசை தனது வீட்டிற்கு வருமாறு கேட்டுள்ளார் என விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாங்கள் திறந்தமனதுடன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளோம்,பல சாத்தியக்கூறுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்,பல கோணங்களில் யார் இதற்கு காரணம் என ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்காப்டரும் அவரது மனைவியும் நேற்று பிரிட்டனிற்கு செல்லதிட்டமிட்டிருந்தனர்.
அவர் தான் மருத்துவர் ஒருவரை பார்ப்பதற்காக செல்வதாக தெரிவித்துள்ளதுடன் தனது கையடக்கதொலைபேசியின் லொகேசனை மனைவியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவர் பொரளை மயானத்திற்குள் இருப்பதை அவரது கையடக்க தொலைபேசி காண்பித்துள்ளது.
எனினும் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து மனைவி பொலிஸாரிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து மயானத்திற்கு சென்ற பொலிஸார் அவர் வாகனத்தில் கைகள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்துடன் ஒன்றிற்கு மேற்பட்ட நபர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் சிசிடிவியில் பதிவாகியுள்ள விடயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM