இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் மூன்று தொன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் 14 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது அப்பொழுது ரோந்துக் கப்பலை பார்த்த நாட்டு படகு ஒன்று வேகமாக சென்றது இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் நாட்டுப் படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் கடலோர காவல் படையினர் நாட்டுப்படகில் இறங்கி சோதனை செய்ததில் அதில் மூன்று தொன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் படகில் ஆறு மீனவர்களும் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த காட்வின், பிச்சையா, மில்டன் ,டார்சன், கிங் ,ரட்சகர் ஆகியோர் என தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு இந்த பீடி இலைகளை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பின் நாட்டுபடகுடன் ஆறு மீனவர்களையும் கைதுசெய்து தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழும பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் கடத்தலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களிடம் விசாரணை நடத்தி கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் மீனவர்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM