தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் மூன்று தொன் பீடி இலைகள் கடத்தல்

Published By: Vishnu

15 Dec, 2022 | 02:14 PM
image

இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் மூன்று தொன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் 14 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது அப்பொழுது ரோந்துக் கப்பலை பார்த்த நாட்டு படகு ஒன்று வேகமாக சென்றது இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் நாட்டுப் படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் கடலோர காவல் படையினர் நாட்டுப்படகில் இறங்கி சோதனை செய்ததில் அதில் மூன்று தொன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் படகில் ஆறு மீனவர்களும் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்  தூத்துக்குடியை சேர்ந்த காட்வின், பிச்சையா, மில்டன் ,டார்சன், கிங் ,ரட்சகர் ஆகியோர் என தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு இந்த பீடி இலைகளை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பின் நாட்டுபடகுடன் ஆறு மீனவர்களையும் கைதுசெய்து தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழும பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் கடத்தலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களிடம் விசாரணை நடத்தி கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் மீனவர்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54