பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான அங்கொட லொக்காவின் சகா எனக் கூறப்படும் 'ஜில்' என்பவருக்குரியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 12 கிலோ போதைப்பொருள்களுடன் இரு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 14 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
அங்கொட, டயர் கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேக நபர்கள் மறைந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
'ஜில்' என அழைக்கப்படும் தனுஷ்க புத்திக என அழைக்கப்படும் நபர் இந்தியாவுக்குச் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
`ஜில்' என்பவர் இந்த போதைப்பொருட்களை படகுகள் மூலம் கடல் வழியாக இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பாதுகாப்பு பிரிவனர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM