வடக்கில் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்கள் அரசியல் ரீதியில் தடுக்கப்படுகிறது - இலங்கை ஆசிரியர் சேவா சங்கம்

Published By: Vishnu

14 Dec, 2022 | 09:14 PM
image

வடக்கு மாகாணத்தில் அதிபர் ஆசிரியர் இட மாற்றங்களில் அரசியல் நீதியில் தடக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் வொல்வின் குற்றச்சாட்டினார்.

இன்றைய தினம் (14) யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் இடமாற்றம் இன்றி பல ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வருகின்றார்கள்.

தற்போதைய நாட்டின் பொருளாளர் நெருக்கடியில் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்தில் இடமாற்றம் பெறாமல் அதிகமான ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கினால் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் கடமையாற்றி வருகிறார்கள்.

எமது தொழிற்சங்கம் நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்து பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் விளக்கிக் கூறியிருக்கிறோம்.

அவரிடம் வடக்கில் ஆசிரியரிடம் ஆட்டம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கான இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில் விசேடமாக கலந்துரையாடியுள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவிடாமல் சேவையின் தேவை கருதி என்ற வாசகத்தை எழுதி அதிபர்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு இசைந்த ஆசிரியர்களை பாடசாலையிலே தங்க வைத்துள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் தொடர்ச்சியாக தங்குவதால் பாடசாலையில் ஆசிரியர்களுக்கிடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுகின்றது.

இதன் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் அதிபர்கள் கூறுவது போன்று சேவையும் இல்லை தேவையும் இல்லை அரசியல் பின்னணியில் இவர்களுடைய இடமாட்டங்களை தடுப்பதற்கான சூழ்ச்சியாகவே உள்ளது.

ஆகவே வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் மாற்றங்கள் உரிய முறையில் இடம் பெற வேண்டும் இல்லையெனில்  மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும்...

2025-01-25 17:23:37
news-image

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத்...

2025-01-25 19:08:44
news-image

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து...

2025-01-25 19:07:42
news-image

ஊழல், மோசடி விசாரணை கோப்புக்கள் மீளத்...

2025-01-25 17:35:45
news-image

புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள்...

2025-01-25 17:29:59
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்...

2025-01-25 21:57:28
news-image

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை...

2025-01-25 17:16:14
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு செல்லப்பிராணிகளை குறைகூறுவது வெட்கக்கேடான...

2025-01-25 19:05:39
news-image

மோசடியாளர்களை கைது செய்யும்போது அரசியல் பழிவாங்கல்...

2025-01-25 17:11:05
news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59