இந்திய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

Published By: Digital Desk 3

14 Dec, 2022 | 03:05 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று (13)  பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ இராஜதந்திரம் தொடர்பில் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சுக்கான கடற்படை தளபதியின் விஜயத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர், கடற்படை தளபதி விருந்தினர் புத்தகத்தில் தனது கையொப்பத்தை இட்டார்.

இந்த சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34