நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான திசையில் பயணிக்க வேண்டியது அவசியம் - மத்திய வங்கி ஆளுனர்

Published By: Digital Desk 2

14 Dec, 2022 | 04:29 PM
image

(எம்.மனோசித்ரா)

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களுடனான பல்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான திசையில் பயணிக்க வேண்டியது அவசியமானதாகும் என்று மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கணக்காய்வாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பரிஸ் கிளப், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட கடன் வழங்குனர்களிடம் கடன் மறுசீரமைப்பு குறித்த கலந்துரையாடல்களில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளோம்.

மத்திய வங்கி இந்த நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பான செய்திகளாகும். எந்த வகையில் நாம் இந்த கலந்துரையாடல்களை இடைநிறுத்தவில்லை.

இந்த கலந்துரையாடல்களை முழுமையாக நிறைவு செய்வதற்கான முயற்சிகளிலேயே நாம் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஜனவரி மாதமளவில் இதனை நிறைவு செய்து கொள்ள முடியும் என்று நாம் இதற்கு முன்னரும் தெரிவித்திருக்கின்றோம் அல்லவா? இந்த நிலைப்பாட்டிலிருந்தும் , அதற்கான முயற்சிகளிலிருந்தும் நாம் வெளியேறவில்லை.

இம்மாதம் இதனை நிறைவு செய்து கொள்ள முடியவில்லை எனில் , ஜனவரியில் அதனை செய்து கொள்ள முடியும். கடன் வழங்குனர்களிடம் உறுதிப்பாட்டினைப் பெற்றுக் கொண்டு அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்க வேண்டும். அதற்கமைய சர்வ பொருளாதார கொள்கையொன்றை முன்வைத்து குறுகிய காலத்திற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அதே போன்று நீண்ட கால மறுசீரமைப்பு மற்றும் சரியான கொள்கை சட்டகத்தின் ஊடாகவும் இதனை எம்மால் செய்ய முடியும். நாட்டை ஸ்திரப்படுத்தும் பாதையில் நாம் பயணிக்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாலும்  கிடைக்காவிட்டாலும் அதனை முழுமையாக நிறைவடையச் செய்ய வேண்டும். நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு நாம் நீண்ட மற்றும் குறுகிய கால மறுசீரமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18