அவுஸ்திரேலிய கடற்பரப்பில் உல்லாசக் கப்பலொன்றிலிருந்து வீழ்ந்த யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பசுபிக் எக்ஸ்புளோரர் (Pacific Explorer) எனும் உல்லாசக் கப்பலில் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நேற்றிரவு பெண்ணொருவர் கடலில் வீழ்ந்தார்.
அவரைக் கண்டுபிடிப்பதற்கு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று காலை ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
23 வயதான யுவதியொருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இப்பெண்ணை கண்டுபிடிப்பதற்கு விமானமொன்றும் 2 ஹெலிகொப்டர்களும் இரவு முழுவதும் தேடுதலில் ஈடுபட்டதாகவும், ஜெவ்வா முனைக் கரையிலிருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் இன்று காலை 7 மணியளவில் இப்பெண்ணின் சடலம் ஹெலிகொப்டர் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டடதாகவும், அவுஸ்திரேலிய கடல்பாதுகாப்பு அதிகாரி சபை தெரிவித்துள்ளது.
தனது குடும்ப அங்கத்தவர் ஒருவருடன் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவர் செவ்வாய் இரவு 11.30 மணியளவில் கடலில் வீழ்ந்தார் என கார்னிவேல் ஒஸ்ட்ரேலியா எனும் கப்பல் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.
இக்கப்பல் மெல்பேர்ன் நகரிலிருந்து கங்காரு தீவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. மேற்படி சம்பவத்தையடு;தது அக்கப்பல் மீண்டும் மெல்பேர்ன் நோக்கி திரும்பியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM