ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணியமைக்க முஸ்தீபு

Published By: Vishnu

12 Dec, 2022 | 08:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைத்து பலமான கூட்டணி ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

கூட்டணி அடிப்படையில் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என அரசாங்கத்தில் ஒரு தரப்பினரும், கட்சி என்ற ரீதியில் தனித்து போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்,செயற்பாட்டு ரீதியான அரசியல் நிலைவரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த வாரம் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் சிறந்தது என கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கூட்டணியாக போட்டியிடலாம் என ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள நிலையில்,பொதுஜன பெரமுனவின் அடையாளங்களை முன்னிலைப்படுத்தி தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்,இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இருந்து விலகியுள்ளதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது, அரசியல்வாதிகளுக்கும்,மக்களுக்கும் இடையில் நல்ல இணக்கப்பாடு கிடையாது, ஆகவே எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்களை நடத்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:27:34
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10