முச்சக்கரவண்டியில் கஜ முத்துக்களை கடத்திய 3 பேர் கைது!

Published By: Digital Desk 3

12 Dec, 2022 | 10:40 AM
image

அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை கைது செய்துள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சம்பவதினமான நேற்று (11) மாலை மகாஓயா இலங்கை வங்கிக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, பிபிலையில் இருந்து கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக  மகாஓயாவிற்கு கடத்தி சென்ற முச்சக்கரவண்டியை கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 5 கஜமுத்துக்களுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் பிபிலையைச் சேர்ந்த 53,34 மற்றும் 36 வயதுடையவர்களாவர்.

மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஆகியன மகாஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு:...

2026-03-06 14:32:34
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

2026-03-06 14:00:29
news-image

ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு;...

2026-03-06 13:41:47
news-image

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய...

2026-03-06 14:01:02
news-image

Update; யாழில் இருந்து பாலை தீவு...

2026-03-06 12:50:23
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-06 12:49:11
news-image

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப்...

2026-03-06 13:00:44
news-image

யாழில் இருந்து பாலை தீவு சென்ற...

2026-03-06 12:42:10
news-image

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க...

2026-03-06 12:37:11
news-image

கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக...

2026-03-06 12:20:49
news-image

மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர்...

2026-03-06 11:19:19
news-image

கட்டுநாயக்கவில் 11 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர்...

2026-03-06 10:52:42