வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் இன்று (11) காலை நகரசபை ஊழியர்கள், பொலிசார் இணைந்து பிடித்து நகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரியவர்கள் கால்நடைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால் நடைகளினால் அதிகளவு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வீதி விபத்துக்களில் அதிகமான விபத்துக்கள் கைவிடப்பட்ட கால் நடைகளினால் ஏற்படுகின்றது எனவே இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் நகரசபை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (11) அதிகாலை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் இலங்கேஸ்வரன் தலைமையில் சென்ற நகரசபை ஊழியர்கள் பொலிசாருடன் இணைந்து மூன்றுமுறிப்பு, மன்னார் வீதி, பூந்தோட்டம், ஹொறவப்பொத்தான ஆகிய நகரசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் காணப்பட்ட சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி கால்நடைகள் கைப்பற்றப்பட்டு நகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றின் அடையாளங்களை உறுதிப்படுத்தி தண்டப்பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவும் அவ்வாறு பெற்றுக்கொள்ளத் தவறினால் அவற்றை ஏல விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM