பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அதுல சேனாரத்னவின் இல்லத்துக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை (டிச. 10) இரவு 10 மணியளவில் 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பேராசிரியர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மைதானத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் சிக்கியதுடன், விபத்துக்கு காரணமான முன்னாள் துணைவேந்தரின் மகன் செலுத்திச் சென்ற கார் தப்பிச் சென்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பேராதனை பொலிஸார் மாணவர்களை கலைத்துவிட்டு, பேராசிரியரை பொலிஸ் பாதுகாப்பில் மீட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பேராசிரியர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது மகனும் தாக்குதலுக்குள்ளான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM