எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுக்கான ஆவணங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளரான பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்படி ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக சங்கத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருந்துப் பொருட்களுக்கான அனுசரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறுகையில்,
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியானது சுகாதாரத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் பற்றாக்குறை நிலவும் மருந்துப் பொருட்களில் ஒரு பகுதியை 'எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகம்' பெற்றுக்கொடுத்துள்ளது.
கொரியாவிலிருந்து 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கப்பல் ஊடாக வரவழைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த ஆவணங்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வுதவிக்கு முழுமையாக ஆதரவளித்த 'எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின்' இலங்கை அமைப்பாளர் பிரான்சிஸுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM