மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றக் கூடாது என தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை கடந்த திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸை இடமாற்றம் செய்யக்கோரி சிலர் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டம் தற்போதைய அரசாங்க அதிபரின் திறமையான செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது. தனக்கு கீழ் கடமையாற்றும் அதிகாரிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு மாவட்டத்தின் நிர்வாகத்தை மிகவும் சிறப்பாக நடத்தி வருவதுடன் மக்களின் அடிப்படைத் தேவைகள் அறிந்ததனால் இன்று அவர் மக்கள் மத்தியில் ஒரு சிறந்த அதிகாரியாகவும் மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் மத்தியில் மதிப்பிற்குரியவராகவும் இருந்து வருகின்றார்.
அத்தோடு பல்வேறுபட்ட அரசியல் கலாசாரத்தைக் கொண்டுள்ள இம் மாவட்டத்தில் கட்சி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் நலனில் அக்கறைசெலுத்தும் விடயங்களில் அனைத்து அரசியல் தலைமைகளையும் கலந்தாலோசித்து செயற்பாடுகளை செவ்வனே செய்துமுடிக்கும் ஒரு சிறந்த அதிகாரியாகவும் அவர் செயற்பட்டு வருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளை பக்கச்சார்பில்லாத செயற்பாடுகள் மூலமாக இல்லாது செய்து இன்று இனங்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தி அதனை தொடர்ச்சியாக பேணிப்பாது காத்து வருகின்றவர்.
இன்று அரசியல் ரீதியாக அதிகாரங்களை இழந்த சிலர் தாங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனதால் அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டுவரும் சிறந்த நிர்வாக கட்டமைப்பை சீர்குலைத்து தற்போது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு விமர்சனத்தினை ஏற்படுத்துவதற்காகவே இந்த இடமாற்றத்தை செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.
ஆகவே இவரது இடமாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டுவரும் சிறந்த நிருவாக கட்டமைப்பையும் மிக அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட இன ஐக்கியத்தை யும் சீர்குலைக்கும் என்பதுடன் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தாமதத்தை ஏற்படுத்தும்.
எனவே நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளையும் விரைவாக செயற்படுத்துவதற்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் பாதுகாப்பதற்கும் அரச அதிபரை இடமாற்றம் செய்யவேண்டாமென கேட்டுக் கொள்வதுடன் ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்பை பாதுகாப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM