மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக நான்கு பிரதேச செயலகப் பிரிவிகளில் 40 குடும்பங்கள் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இரவு மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தால் மன்னார் , மாந்தை மேற்கு, நானாட்டான், மடு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. மீன்பிடி வலைகள் என்பன கடல் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போய் உள்ளன.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 40 குடும்பங்களைச் சார்ந்த 159 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்கள்.
11 வீடுகள், ஒரு சிறு வியாபார குடிசை மற்றும் கடை சேதமடைந்துள்ளதோடு, 100 வாழை மரங்களும் சேதமாகியுள்ளன. மீன்பிடி படகுகள் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. அத்தோடு, 10 மீன்பிடி வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM