கர்நாடகா மாநிலத்திலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவர் சங்க விழாவில் புர்கா அணிந்து பொலிவூட் பாடலுக்கு நடனமாடிய 4 ஆண் மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மங்களூரு நகரிலுள்ள செயின்ற் ஜோசப் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இக்கல்லூரி மாணவர் சங்கத்தின் ஆரம்ப விழா அண்மையில் நடைபெற்றது. இதன்போது, ஒரு நிகழ்வாக புர்கா அணிந்த ஆண் மாணவர்கள் நால்வர் பொலிவூட்டின் தபாங் திரைப்படத்தின் பாடலொன்றுக்கு நடனமாடினர்.
ஆடிக்கொண்டிருந்த மாணவர்கள் இடையிலேயே மேடையிலிருந்து வெளியேறும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், இவ்விசாரணைகள் முடிவடையும் வரை மாணவர்கள் நால்வரும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி கல்லூரி அதிபர் கலாநிதி எம்.சுதீர் அறிவித்துள்ளார்.
மேற்படி நடனத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அதிபர் குறிப்பிட்டுள்ளார். இவ்விழாவின் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலில் இந்;நடனம் இம்பெற்றிருக்கவில்லை எனவும் கல்லூரியில் உள்ள அனைவருடைய மத நல்லிணக்கத்திற்கு தீங்கு இழைக்கும் எந்த நடவடிக்கையையும் கல்லூரி நிர்வாகம் ஆதரிக்காது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM