ஐரோப்பிய எல்லைகளில் காத்திருக்கின்ற ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும் இல்லாத வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய எல்லையில் காத்திருக்கின்ற குடியேற்றவாசிகள் தாக்கப்படுகின்றனர் பாலியல் தாக்குதல்கள் உட்பட மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தப்படுகின்றனர் என அறிக்iயொன்று தெரிவித்துள்ளது.
2021 - 2022 இல் ஐரோப்பாவிற்கு செல்ல முயன்று எல்லைகளில் சிக்கிய 733பேர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கைக்கான தகவல்களை வழங்கியவர்கள் தங்கள் துன்பங்கள் மற்றும் விரக்திகுறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும் பெருமளவானவர்களுடன் சுகாதாரமற்ற பகுதிகளில் தடுத்துவைக்கப்பட்டதாகவும் அதேவேளை தங்களுடைய புகலிடக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவித்தவர்களில் ஐந்து வீதமானவர்கள் மாத்திரம் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்படும்போது அளவுக்கதிகமான பலத்தை அனுபவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனனர்.
பல அரசசார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய எல்லை வன்முறை கண்காணிப்பு அமைப்பே இந்த விபரங்களை தொகுத்துள்ளது.
ஐரோப்பாவின் எல்லையில் உள்ள போலாந்து கிரேக்கம் குரோசியா உட்பட 15 நாடுகளில் இந்த தரவுகள் பெறப்பட்டுள்ளன.
ஐரோப்பாவின் வெளிப்புற எல்லையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் காணப்பட்ட குடியேற்றவாசிகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகவும் ஈவிரக்கமற்ற வன்முறைகளை பதிவு செய்வதற்கு எவரும் இருக்கவில்லை என எல்லை வன்முறை கண்காணிப்பு தெரிவித்;துள்ளது.
அகதிகள் ஐரோப்பாவின் எல்லைகளை நோக்கி முன்னேறுவதை தடுப்பதற்காக 13 நாடுகள் மிகவும் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளானஅடித்தல் தலைகளை மொட்டையடித்தல் பலவந்தமாக ஆடைகளை களைதல் பாலியல் வன்முறைகள் நாய்தாக்குதல் போன்றவற்றை முன்னெடுத்தன என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லைக்கு அப்பால் பலவந்தமாக அனுப்ப முடியாது மக்களிற்கு புகலிடக்கோரிக்கையை முன்வைப்பதற்கான உரிமைகள் உள்ளன என ஐரோப்பிய சர்வதேச சட்டங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM