பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்வாதம்: முல்லைத்தீவில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு நிகழ்வு

Published By: Nanthini

08 Dec, 2022 | 05:57 PM
image

யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பால்நிலை வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் ஒட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 'பாலியல் தொந்தரவற்ற பயணத்தை உறுதி செய்வோம்', 'சக பயணியின் உரிமைகள் மீறப்படும்போது குரல் கொடுப்போம்', 'பாலியல் துன்புறுத்தல் நம் பண்பாட்டுக்கு உதவாது', 'பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு அனைவரதும் பொறுப்பு', 'பெண்களையும் சிறுவர்களையும் வன்முறை செய்யாத பண்பாட்டை உருவாக்குவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56