(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
வரி அதிகரிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி விதிக்கும் அரசாங்கம் சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க அவதானம் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆனால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எவ்வித திட்டங்களையும் உள்ளடக்கியதாக காணப்படவில்லை.
வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டுமானால் தேசிய வளங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. தேசிய வளங்களை தனியார் மயப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
அரச வருமானத்தை 63 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ளும் அரசாங்கத்தின் இலக்கு வரி அதிகரிப்பை மாத்திரம் மையப்படுத்தியதாக காணப்படுகிறது.
வரி அதிகரிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய சேவை மற்றும் தேவைகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம் சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க அவதானம் செலுத்தவில்லை.
வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரி அறவீட்டால் நடுத்தர மக்கள் மீது சுமை சுமத்த வேண்டிய தேவை ஏற்படாது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரம்,கல்வி ஆகிய துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே இந்த வரவு-செலவுத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியப்படாத கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM