அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த தீர்வாக அமையாது - விமல் வீரவன்ச

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 02:58 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச வளங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது பொருளாதார மறுசீரமைப்பிற்கான சிறந்த தீர்வாக அமையாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

செய்துக் கொள்ளப்பட்ட தவறை திருத்திக் கொள்ளாவிட்டால், அது பிறிதொரு தவறாக கருதப்படும். அரசாங்கம் தவறை திருத்திக் கொள்ளவில்லை.

நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல், கொவிட் -19 பெருந்தொற்று தாக்கம் ஆகிய காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

எமது அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினாலும், பொருத்தமற்ற பொருளாதார கொள்கையினாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

உண்மையான காரணிகளை இணங்கண்டு அதற்கு தீர்வு காணாவிட்டால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச வளங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது பொருளாதார மறுசீரமைப்பிற்கான சிறந்த தீர்வாக அமையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் நடைமுறைக்கு சாதகமான தீர்மானங்களை எடுக்கவில்லை.

பாடசாலை மாணவர்களின் உபகரணங்களின் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் கல்வி குறித்து அவதானம் செலுத்தி விலை குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாடசாலை உபகரணங்களுக்கு வரி விதிக்கவில்லை.

இயல்பான காரணிகளினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டொலர் பெறுமதி அதிகரிப்பு அனைத்து இறக்குமதி உற்பத்திகளுக்கு தாக்கம் செலுத்தியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29