இந்தியாவின் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முதலிடம் பெற்றுள்ளது.
அதேவேளை டெல்லி மாநகர சபையில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியீட்டி? 15 வருட பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது,
குஜராத்
குஜராத் சட்டசபைக்கான தேர்தல்கள் கடந்த டிசெம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெற்றன.
182 ஆசனங்களைக் கொண்ட இச்சட்டசபையில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு 92 ஆசனங்கள் தேவை. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது என பெறுபேறுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதுவரை அக்கட்சி 99 ஆசனங்களையே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குஜராத் வரலாற்றில் பாஜக இம்முறை ஆகக்கூடுதலாக 153 ஆனங்களை வென்றுள்ளது.
இதேவேளை காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளிலேயே வென்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி 77 ஆசனங்களை வென்றிருந்தது.
கடந்த தடவை 6 ஆசனங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி 6 ஆசனங்களை வென்றுள்ளது. கடந்த தடவை அக்கட்சி ஆசனங்கள் எதையும் வென்றிருக்கவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில்...
இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதலிடம் பெற்றுள்ளது. தற்போது அங்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 12 ஆம் திகதி இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன.
68 ஆசனங்களைக் கொண்ட இச்சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 35 ஆசனங்கள் தேவை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வென்றுள்ளது. அல்லது முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி 22 ஆசனங்களையே பெற்றிருந்தது.
கடந்த தடவை 43 ஆசனங்களைப் பெற்று ஆட்சிமைத்த பாஜக இம்முறை 28 தொகுதிகளில் வென்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது.
டெல்லி மாநக சபையில்...
டெல்லி மாநகர சபைக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியீட்டியுள்ளது.
250 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகரசபைக்கு கடந்த 4 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. கடந்த தடவை அக்கட்சி 49 உறுப்பினர்களையே பெற்றிருந்தது.
கடந்த தடவை 181 ஆசனங்களை வென்று ஆட்சியமைத்த பாஜக இம்முறை 104 ஆசனங்களையே வென்றுள்ளது. இதன் மூலம், டெல்லி மாநகர சபையில் 15 வருடகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM