காலி மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்!

Published By: Digital Desk 3

08 Dec, 2022 | 11:43 AM
image

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்ப வன்முறையாக அதிகரித்துள்ள  நிலையில், அவ்வாறான குடும்பங்களின் தகவல்களை கண்டறிந்து தேவையான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக காலி மாவட்ட சமூக அமைப்புக்கள் அபிவிருத்தி நிலையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சமூக அமைப்பு மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளதாவது,

தற்போது சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  அதிகரித்துள்ளன.  இது தொடர்பான  தகவல்களை தினமும் பெறுகிறோம். அதன்படி தேசிய மட்டத்தில் அவற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க தீர்மானித்தோம்.

காலி மாவட்டத்தில் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் கிராமிய மட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின்படி, குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

எனவே பிரதேச செயலக மட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.  அதன்படி, அக்மீமன, ஹிக்கடுவ, பத்தேகம, அம்பலாங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்கனவே அந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.  எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிறுவனங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற சட்டத்தரணிகளின் உதவி குறித்தும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக இளைஞர்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தெரு நாடகக் குழுவுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21