கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இதன்போது கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பயணச்சீட்டு இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM