பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுநீரகங்களை விற்க முன்வந்த இலங்கை மக்கள் - வேட்டையாடிய கும்பல்

Published By: Rajeeban

06 Dec, 2022 | 04:27 PM
image

தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறிய குடும்பங்களை ஏமாற்றி மனித உடற்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்

பொரளையில் உள்ள பிரபல மருத்துவமனை சிறுநீரகம் விற்பனை செய்தமைக்காக பணத்தை தரவில்லை என பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக மிகவும் சிரமத்தை எதிர்கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களே சிறுநீரகங்களை விற்றுள்ளனர்.

திங்கட்கிழமை பொலிஸில் சரணடைந்த முக்கிய சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 15 கஜிமாவத்தையை சேர்ந்த 41 வயது நபரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 குறிப்பிட்ட நபர் சிறுநீரகத்தை விற்பனை செய்பவர்களிற்கும் அதனை பெற்றுக்கொள்பவர்களிற்கும் இடையில் தரகர் போல செயற்பட்டார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதற்காக கட்டணங்களை பெற்றுக்கொண்டதுடன் மாத்திரமில்லாமல் சிறுநீரகத்தை விற்பனை செய்பவர்களிற்கு மருத்துவமனையின் நிர்வாகம் வழங்கிய பணத்தையும் இவர் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை சட்டவைத்திய அதிகாரி முன்நிறுத்தியவேளை அவர்களில் ஒருவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டமை குறித்து விபரம் தெரியவந்துள்ளது.

சிறுநீரகங்களை வழங்கினால் பெரும் பணம் தருவதாக தெரிவித்தனர் ஆனால் பணம் எதனையும் தரவில்லைஎன பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-17 11:20:42
news-image

வாழைத்தார் வெட்டச் சென்றவர் காட்டு யானை...

2025-03-17 11:13:37
news-image

வெற்றிலைக்கேணி மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக...

2025-03-17 11:03:21
news-image

ஆறு மாத கர்ப்பிணிப் பெண் தீயில்...

2025-03-17 10:45:54
news-image

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள்...

2025-03-17 10:41:53
news-image

ஹுனுப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-17 10:25:01
news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று...

2025-03-17 10:27:48
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34