வெள்ளரிக்காய்!

Published By: Devika

06 Dec, 2022 | 05:15 PM
image

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்றுநோயி­லிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உட­லில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்கவைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்­காய் அன்றாடம் செய்கிறது.

* அழகு, ஆரோக்கியம் இவை இரண்டை­யும் அள்ளித் தரும் வெள்ளரிக்­காய் கோடையில் ஏற்படும் சோர்வை போக்கி குளுமை தருவதோடு நம் உட­லின் தோற்­றத்தையும், தோலின் மென்மை­யையும் மேம்படுத்தும்.

* முழுவதும் நீர்ச்சத்தைக் கொண்டுள்­ளது வெள்ளரிக்காய். சிறிதளவு மாச்சத்தும், புரதச் சத்தும் இருந்­தாலும் விட்ட­மின்­களும், தாது உப்புக­ளும் அதிகளவில் உள்ளன.

* குடலில் எளிதாக செரிமானமாகக்கூடிய நார்ச்சத்தையும் பெற்­­றுள்ளது. மிக மிகக் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்­ளது.

* வெள்­ள­ரிக்­காயில் காணப்படும் குக்கர்­விட்டே­­சின் அதிக மருத்­துவ குணங்கள் நிறைந்த வேதிப் பொருளாகும்.

* உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளோர் அன்றாடம் தாங்கள் சாப்பிடும் உணவில் 100 கிராம் அளவு திட உணவைக் குறைத்து அதற்குப் பதில் வெள்ளரிக்காய் உண்பதால் நல்ல பலன் காணலாம்.

* நீர்ச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் தொல்லைகளான கண் எரிச்சல், வறண்ட சருமம், ஒற்றைத் தலைவலி, மயக்கம், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகள் வெள்ள­ரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் தீரும்.

* மூக்கின் மேல் ஏற்படும் கரும் புள்ளிகள், துளைகள் மறைய வெறும் வெள்ளரிச் சாற்றை பஞ்சில் நனைத்து வாரம் ஒரு முறை தடவி வருவது சிறந்த பலன்களைத் தரும். முகம், கழுத்துப் பகுதிகளிலும் வெள்­ள­ரிச் சாற்றை தடவி அரைமணி நேரம் காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள­லாம். இதனால் பருக்கள் குறையும்.

* வெள்ளரிக்காயை பச்சையாகத் தோலோடு உண்பது தான் நல்லது. மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சி­யைத் தருவது அதிலுள்ள நீர்ப்பாகம் இல்லை. இதில் அதிக அளவில் கிடைக்­கும் சோடியம் தான் அக்குளிர்ச்சியைத் தருகிறது.

* வெள்ளரிக்காய் ‘செலட்’ மிகவும் விசேஷமானது. தோல் சீவாமல் வெள்­ளரிக்காயை வட்டமான வில்­லைகள் செய்து ஒரு வில்லையின் மேல் ஒரு வில்லை தக்காளி அதன் மேல் ஒரு வில்லை வெங்காயம் வைத்து மிளகுத் தூளையும் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்­கும். அத்துடன் ஒரு சத்துள்ள உண­வாகவும் ஆகும்.

* பச்சை வெள்ளரிக்காயின் சாற்றை முகத்தில் தடவி அப்­படியே உலரவிட்டால் முகத்தில் அபூர்வ­­மான அழகு மேலிடும்

* தாகத்தைத் தணிப்பதில் வெள்ளரிக்காயைப் போல வேறு ஒன்றும் கிடையாது என்றே சொல்லலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right