சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை  விரைவாக விசாரிக்க பிரத்தியேக நீதிமன்றம் - அமைச்சர் விஜயதாஸ

Published By: Digital Desk 2

05 Dec, 2022 | 08:41 PM
image

 (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பிரத்தியேக நீதிமன்றத்தை  ஸ்தாபிக்க பிரதம நீதியரசர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு இந்த பிரத்தியேக நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படும் என நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு  மறுசீரமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் நீதியமைச்சர்  கூறுகையில்,

நீதிமன்றங்களில் தண்டப்பணம் உட்பட பல்வேறு அறவிடல் ஊடாக நாளாந்தம் பில்லியன் ரூபா வரை கிடைக்கப் பெறுகிறது,

இருப்பினும் அந்த தொகையை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரம் நீதியமைச்சுக்கு கிடையாது. ஆகவே இந்த நிதியை நீதிமன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில்  பிரத்தியேக நீதிமன்றங்களை ஸ்தாபிக்க பிரதம நீதியரசர் இணக்கம் தெரிவித்துள்ளார். இந் நீதிமன்றங்கள் எதிர்வரும் ஆண்டு ஸ்தாபிக்கப்படும்.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. 1753 ஆவணங்கள் இதுவரையில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு வழங்கப்படும் நட்டத்தை இரண்டு இலட்சமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15