தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை இன்று (05) திங்கட்கிழமை பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ.இருதராஜா சபையில் சமர்ப்பித்தார்.
வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஏழு வாக்குகளும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எட்டு வாக்குகளும் பதிவானது.
15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகரசபையில் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் 4 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒருவருமாக வாக்களித்தனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 பேரும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா ஒருவரும் வாக்களித்தனர்.
பருத்தித்துறை நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒரு ஆசனங்களையும் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM