(எம்.வை.எம்.சியாம்)
அளுத்கம, வெலிப்பென்ன பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு முறைப்பாடு பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் நிஷான் குமாரவின் வெலிபன்ன பொந்துபிட்டிய குருந்த வீதியில் உள்ளவீடே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று (டி.03) வீட்டுக்குள் புகுந்த ஆயுதக் கும்பல் வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக வெலிப்பென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் இருக்கவில்லை. இருப்பினும் பொலிஸ் அதிகாரியின் மனைவி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேகநபர்கள் டீ- 56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
களுத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் வெலிப்பென்ன பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM