மனிதனின் மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் விதமான புதிய பரிசோதனையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மனிதர்களிடத்திலும் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் மனிதன் மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும்.
இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்த சோதனையை எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் மேற்கொள்ளவுள்ளது.
இன்னும் 6 மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இவ்வாறு பொருத்தப்படும் சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நியூராலிங்க் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் ஒரு குரங்குக்கு மூளையில் சிப்பை பொருத்தி, வீடியோ கேம் விளையாடியதை பார்க்க முடிந்தது.
அந்த வகையில் தற்போது இந்த சிப் வாயிலாக மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும் என்றும் முதுகுத் தண்டு எலும்பு முறிவு, பக்கவாதத்தால் முழுவதும் ஊனம் அடைந்தவர்களை மறுவாழ்வு செய்வதில் நியூராலிங்க் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றி அடைந்தால் சிப் உதவியுடன் கணினியை கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினியால் செய்ய முடியும்.
இது தொடர்பாக எலான் மஸ்க் கூறுகையில், ‘நாங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இது தொடர்பான ஆய்வறிக்கைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துவிட்டோம். இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். நாங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM