logo

ஆட்சியதிகாரத்தை விட்டு தப்பிச் சென்றவர்கள் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளனர் -  கிரியெல்ல

Published By: Digital Desk 2

03 Dec, 2022 | 06:54 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அவசியம் என சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்துகின்ற நிலையில் ஆட்சியதிகாரத்தை விட்டு தப்பிச் சென்றவர்கள் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

பொருளாதார மறுசீரமைப்பிற்கான திட்டங்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்காவிடாத நிலையில் எவ்வாறு அத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவது என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் கடந்த மாதங்களில் போராட்டம் தோற்றம் பெற்ற போது இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்ட வேளை '  இலங்கையில் 'அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என தூதுவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து,ஆறு மாத காலத்திற்கு பின்னர் தேர்தலை நடத்துவதுடன், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டார்கள்.

சர்வதேசம் மற்றும் நாட்டு மக்களின் ஆலோசனைகளுக்கு இதுவரை மதிப்பளிக்கப்படவில்லை. அரசாங்கத்தை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள் தற்போது மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரத்தின் நிர்வாகி சமந்தா பவரை அண்மையில் சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு  அவசியம் என சர்வதேசம் வலியுறுத்தியுள்ள நிலையில் இதனை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் வழமை போல் செயல்படுகிறது.

பொருளாதார மறுசீரமைப்பிற்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் ஏதும் பாராளுமன்றத்திற்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டு நிபந்தனைகள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் எவ்வாறு பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 16:51:12
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26
news-image

ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு...

2023-06-08 13:35:51
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-06-08 13:47:34