தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சுவீடிஷ்- சுவிஸ் பொறியியல் நிறுவனமான ஏபிபி நிறுவனத்துககு சுவிட்ஸலாந்து 43 லட்சம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.
தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகருக்கு அருகில், குசைல் மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. உலகின் 4 ஆவது மிகப் பெரிய அனல் மின்நிலையமான இம்மின்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இம்மின்நிலைய நிர்மாணம் தொடர்பில் லஞ்சம் வழங்கப்படுவதை தடுக்கத் தவறியதாக, சுவிட்ஸர்லாந்தில் தலைமையகத்தைக் கொண்ட ஏபிபி நிறுவனம் ஒப்புக்கொண்டது என சுவிட்ஸர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்நிறுவனதுக்கு 4 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்கப்பட்டதாகவும், விசாரணைகளுக்கான செலவாக 50,000 சுவிஸ் பிராங்குகள் செலு;த்த உத்தரவிடப்பட்டதாகவும் சுவிஸ் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM