அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திச் சென்ற வியாபாரி ஒருவரை ஒலுவில் பகுதியில் வைத்து, நேற்று வியாழக்கிழமை (டிச. 1) இரவு பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 7 மணியளவில் ஒலுவில் வீதியில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நிந்தவூரில் இருந்து மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவரை பொலிஸார் வழிமறித்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர் பொலிஸாரை கண்டதும் வாகனத்தை வீதியில் போட்டுவிட்டு, அப்பகுதியில் உள்ள வயலில் தப்பி ஓடியுள்ளார்.
அதனையடுத்து பொலிஸார் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று, அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து ஒரு கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய நிந்தவூரைச் சேர்ந்தவர் எனவும் அவர் நீண்ட காலமாக அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு போதைப்பொருளை கடத்திச் சென்று, விற்பனை செய்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM