இலங்கையின் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்தே அதிக ஆர்வம் கொணடுள்ளன என மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதில் தற்போதைய நெருக்கடியை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சீர்திருத்தங்களிற்கான இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊழல் மிகுந்த பொல்லாத அமைப்பு முறையை ஆழமான மாற்றத்திற்கு உட்படுத்தவேண்டும் என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு தேர்தல்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை என ராவயவின் ஸ்தாபக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
தேர்தலிற்கான நேரம் என ஒன்று உள்ளது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நெருக்கடி உள்ளது அதிகாரத்திற்கான தாகம் அதிகமாக உள்ளது எனவும் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு முயல்வதற்கு பதில் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து அதிக கரிசனையை இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் வெளிப்படுத்துகின்றன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
அமைப்பு முறை மாற்றத்திற்கான தற்போதைய வேண்டுகோள் அரசமைப்பிற்குள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM