யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேச சபையினரால் கல்லுண்டாய் வைரவர் ஆலயத்துக்கு முன்பாக இன்றும் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இந்த போராட்டம் நேற்றுமுன்தினம் (நவ. 30) புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளான இன்றும் இடம்பெற்று வருகிறது.
போராட்டம் நடந்த முதல் இரண்டு நாட்களான நேற்றும் நேற்று முன்தினமும் யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லுண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த 8 வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
அத்துடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. எனினும், இன்றைய தினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.
நேற்று யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இவ்வாறான சூழலிலேயே மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM