(என்.வீ.ஏ.)
தென் ஆபிரிக்காவில் அடுத்த வருடம் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியன் இலங்கை சி குழுவில் இடம்பெறுகிறது.
தென் ஆபிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் கொன்வென்ஷன் நிலையத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற பகிரங்க குலுக்கல் மூலம் 16 அணிகள் குழுநிலைப்படுத்தப்பட்டது.
குலுக்கல் மூலம் அணிகள் குழுநிலைப்படுத்தப்பட்டபோது சி குழுவில் இலங்கையுடன் உலக தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள ஜெமெய்க்கா, 5ஆம் இடத்திலுள்ள வரவேற்பு நாடு தென் ஆபிரிக்கா, 9ஆம் இடத்திலுள்ள வேல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.
இங்கிலாந்தின் லிவர்பூரில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூரை மாத்திரம் வீழ்த்தி 15ஆம் இடத்தைப் பெற்ற இலங்கை, உலக தரவரிசையில் 16ஆம் இடத்தில் இருக்கிறது.
இது இவ்வாறிருக்க நடப்பு உலக சம்பியன் நியூஸிலாந்து டி குழுவிலும் 2019இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற அவுஸ்திரேலியா ஏ குழுவிலும் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த சிங்கப்பூர் டி குழுவில் இடம்பெறுகிறது.
குலுக்கல் மூலம் அணிகள் குழுநிலைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி உத்தியோகபூர்வமாக உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென் ஆபிரிக்காவின் தேசிய மற்றும் மாகாண அரசுகளின் பிரதிநிதிகள், வலைபந்தாட்ட உலகக் கிண்ணம் 2023 பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், உலக வலைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள், நெட்போல் சவுத் ஆபிரிக்கா பிரிதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM