கிரிக்கெட்டை விட பெண்களை சந்திப்பதிலேயே சாமிகவிற்கு ஆர்வம் அதிகம் - பிரமோதய விக்கிரமசிங்க

Published By: Rajeeban

01 Dec, 2022 | 04:30 PM
image

இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண கிரிக்கெட் விளையாடுவதை விட பெண்களை சந்திப்பது குறித்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொகான் டி சில்வாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சாமிகருணாரட்ண பெண்களை சந்திப்பது குறித்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ரி20 உலக கிண்ணப்போட்டிகளின் போது பயிற்சிகளை விட்டுவிட்டு அவர் பெண்நண்பர்களை தனது அறைக்கு அழைத்துச்சென்றார் என பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கடிதம் ஏன் இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுவினர் சாமிக கருணாரட்ணவை அணியிலிருந்து நீக்க தீர்மானித்தனர் என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில் காணப்படுகின்றது.

குறிப்பிட்ட கடிதம் உலக கிண்ணப்போட்டிகளின் போது காணப்பட்ட பல பிரச்சினைகள் குறித்து  குறிப்பிட்டுள்ளது.

கிரிக்கெட் மீதான சாமிகவின் அர்ப்பணிப்பு குறைவடைந்துவிட்டது அவரது கவனம் கவனத்தை திசைதிருப்பக்கூடிய தனிப்பட்ட விடயங்கள் குறித்தே காணப்பட்டது  என பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சி;ல்வர்வூட் சாமிக குறித்து நம்பிக்கை இழந்துவிட்டார். பல தடவைகள் சாமிக தலைமை பயிற்றுவிப்பாளருக்கு உண்மையாக இருக்க தவறிவிட்டார் எனவும் பிரமதோய விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பெண்களை சந்திப்பது குறித்தே சாமிக ஆர்வமாகயிருந்தார் பயிற்சிகளை புறக்கணித்தார். சாமிக  தனது அறைக்கு பெண்களை அழைத்துச்சென்றாரா என்பதை உறுதி செய்வதற்காக சிசிடிவி பதிவுகளை ஆராயவேண்டும் எனவும் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாமிக கருணாரட்ண ஹோட்டல் அறையில் விளக்குகளையும் ஊதுபத்தி குச்சிகளையும் கொழுத்தினார் அறையில் தீப்பிடித்திருந்தால் பெரும் அனர்த்தமாக மாறியிருக்கும் ஹோட்டல் பராமரிப்பாளர்கள் இதனை தெரிவித்தனர். 

அணி முகாமையாளர்கள் விளக்கு ஊதுபத்தி குச்சி போன்றவற்றை ஏற்றினால் அதனை அணைக்காமல் அறையிலிருந்து வெளியேற வேண்டாம் என அணி முகாமைத்துவம் எச்சரித்திருந்த போதிலும் சாமிக கருணாரட்ண இவ்வாறு நடந்துகொண்டார் என தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிற்காக சாமிகவை மீண்டும்  தெரிவுசெய்யும் போது  அதற்கு முன்னர் உளவியல் பரிசோதனைகளிற்கு உட்படுத்தவேண்டும் என பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35