ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (30) இடம்பெற்ற நிறைவேற்று சபைக் கூட்டத்தில் டக்ளஸ், அதாவுல்லாஹ்வின் கட்சிகள் உட்பட 4 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், குறித்த கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகளின் செயலாளர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் தாங்களோ அல்லது தமது கட்சியின் நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எவருமோ பங்குபற்றமாட்டார்கள் என அந்தக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேச விமுக்தி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் டி. கலன்சூரிய, மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ ஜயவர்தன யாப்பா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஏ.எம்.எம். அதாவுல்லாஹ் ஆகியோரே கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM