யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றம் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.
யாழ் நகர்ப் பகுதியில் 6 பலசரக்கு கடைகள், குருநகர் பகுதியில் 5 பலசரக்கு கடைகள் மற்றும் வண்ணார்பண்ணை பகுதியில் ஒரு கடை ஆகிய 12 கடைகளிலும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், அதன் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (நவ 30) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 12 வர்த்தகர்களும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அடுத்து அந்த 12 பேருக்கும் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மேலதிக நீதவான், சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM