பரிசுக்கு நன்றி !

Published By: Ponmalar

30 Nov, 2022 | 03:53 PM
image

பரிசளிப்பது ஒரு கலை. சரியான சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு தகுந்த பரிசை அளிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. பரிசளிப்பதற்கான டிப்ஸ் இதோ:

‘ விருந்துக்குப் பின் பணத்தை கவரில் போட்டு கொடுக்கும்போது, கவரின் உள்பகுதியில் உங்கள் பெயர், முகவரி, பரிசுத் தொகை ஆகியவற்றை குறிக்கவும்.

‘ சிறுமியருக்கு ஹேர் க்ளிப், ஹேர் பேண்ட், வளையல்கள், தோடுகள், கலர் ஸ்டிக்கர் பொட்டுகளை கொடுக்கலாம்.

‘ வயதுக்கேற்றவாறு புத்தகங்களை பரிசாக கொடுப்பது, பெறுபவருக்கு உற்ற நண்பரை பெற்றுத் தருவதற்கு சமம்.

‘ உயர் அதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளித்தால், தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதோடு, நீங்கள் காக்காய் பிடிக்க முயல்வதாக மனதில் கொள்வர்; அதை தவிர்க்கவும்.

‘ பெண்களுக்கு தாம்பூலத்துடன் அரக்கு, அடர்ந்த பச்சை, மஞ்சள் நிறத்தில் தரமான ரவிக்கை துணி வைத்து கொடுக்கலாம்.

‘ திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு நேரில் சென்று பரிசளிக்க முடியாவிட்டால், கொரியர் மூலம் அனுப்பினால், செலவும் மிச்சம்; குறித்த நேரத்திலும் சென்றடையும்.

‘ விலை உயர்ந்த அலங்கார பொருட்களை விட, சாதாரண துண்டு, மப்ளர், சொக்ஸ் மற்றும் இசைத்தட்டு போன்றவற்றை வயதானோருக்கு அளிக்கலாம்.

‘ தோட்டக்கலையில் ஆர்வமுள்ளோருக்கு செடிகள் மற்றும் மரக் கன்றுகளை தந்தால், இவை வளர்ந்து காலத்துக்கும் மகிழ்ச்சியையும் பலனையும் தரும்.

‘ நெருங்கிய நண்பர் மற்றும் உறவினருக்கு திருமண பரிசு தரும்போது, அவர்களின் தேவை என்ன என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றாற் போல் பரிசளிக்கலாம்.

‘ பணமாக கொடுப்பதை விட, ‘கிப்ட்’ செக் மற்றும் வவுச்சர்களாக கொடுத்தால் சம்பந்தப்பட்டோர் தேவைக்கேற்ப உபயோகப்படுத்துவர்.

‘ யார், எந்தப் பரிசு அளித்தாலும் பெறுபவர், கொடுப்பவர்களுக்கு ‘நன்றி’ சொல்வது நாகரிகத்தை காட்டும். நன்றி சொல்லும் நாகரிகம் இல்லாதவர்களுக்கு இந்தக் குறிப்பு ரொம்பவே பொருந்தும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right